Saturday, 3 February 2018

கேப் டவுன் நகர மக்களை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்


லகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக உலகின் ஒரு சில பகுதிகளில் பெருமழை பொழிந்து வெள்ளம் வந்து மக்கள் அவதிபடுகின்றனர், மற்றொரு புறம் பல மாதங்களாக மழை பெய்யாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது,  

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் வசிக்கும் நான்கு மில்லியன் மக்கள் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் ரேஷனில் உணவு பொருட்கள் வழங்குவது தண்ணீரை அளந்து வழங்க துவங்கி உள்ளது. இப்போது ஒரு குடும்பத்திற்கு ஐம்பது லிட்டர் என்ற அளவில் நகரமெங்கும் அமைக்கப்பட்டு உள்ள 200 தண்ணீர் வழங்கும் மையங்களில் வழங்கப்படும் தண்ணீர், அடுத்து வரும் வாரங்களில் தண்ணீரின் அளவு குறைக்கபட்டு ஒரு குடும்பத்திற்கு இருபத்தி ஐந்து லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் அங்கு வரும் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் அங்கு கையிருப்பில் இருக்கும் தண்ணீர் மொத்தமும் தீர்ந்து விடும் அபாய நிலை உருவாகி உள்ளது.   


அரசாங்கம் தினமும் அளந்து வழங்கும் தண்ணீரை ஷவர் பயன்படுத்தி குளிக்கவோ அல்லது தேவையில்லாமல் கழிப்பறையில் ஃபிளஷ் செய்து வீணாக்கவோ வேண்டாம் என்று நகரமெங்கும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் நகரில் விளையாட்டு போட்டிகளில் விளையாட வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கடுமையான தண்ணீர் சிக்கன கட்டுப்பாடுகள் பொருந்தும். இப்போதே அங்கும் வசிக்கும் மக்களுக்குள் ஒருவர் அதிகமாக தண்ணீர் பிடித்து விட்டார் என்று சொல்லி சண்டைகள் வர துவங்கி உள்ளது, அதனால் இனி வரும் காலங்களில் தண்ணீர் வழங்கும் மையங்களில் மக்களை கண்காணிக்க காவலர்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது. 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 27 January 2018

உலக புகழ்பெற்ற பத்து பிரபலங்கள்


 மக்கள் மனதில் இடம்பிடித்த (எல்லா காலங்களிலும்) உலக புகழ்பெற்ற பத்து பிரபலங்களையும், அவர்களின் சிறப்புகளையும் காணொளி காட்சி வடிவில் தொகுத்து கொடுத்திருக்கிறோம், காணொளி காட்சி பிடித்திருந்தால்  டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 20 January 2018

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்


லக அளவில் தனி நபர் வருமானம் மிக அதிகமாக உள்ள  டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் காணொளி காட்சி தொகுப்பாக வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானலில், காணொளி காட்சி பிடித்திருந்தால்  டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



சவூதி அரேபியா - தனி நபர் வருமானம் $56000
சுவிச்சர்லாந்து -  தனி நபர் வருமானம் $56000
அமெரிக்கா - தனி நபர் வருமானம் $57000
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருடத்துக்கு  $68000
நார்வே  - தனி நபர் வருமானம் $68000
குவைத் - தனி நபர் வருமானம் $72000
புருனே - தனி நபர் வருமானம் $80000
சிங்கப்பூர் - தனி நபர் வருமானம் $85000
லக்ஸம்பெர்க் -தனி நபர் வருமானம் $94000
கத்தார் - தனி நபர் வருமானம் $146000

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 13 January 2018

உலகை ஆளும் பத்து ஆபத்தான சர்வாதிகாரிகள்


ந்த சர்வாதிகாரிகள் பட்டியலில் சிலர் ஆட்சியில் இன்னும் தொடர்கிறார்கள், சிலர் இப்போது ஆட்சியில் இல்லை - இவர்கள் ஆட்சியில் (செய்த) செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சியளிக்கும் கொடூரமான செயல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த காணொளி பதிவு. இது போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு துன்பம் விளைவிப்பதுடன், சுற்றியிருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாய் மாறி விடுகிறார்கள்.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 6 January 2018

உலகெங்கும் பனிமயம்

2018 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அணு ஆயுத பட்டன் விளையாட்டை துவங்கி உலக அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பி உள்ளனர், நாடாளும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சூட்டை கிளப்புகின்றனர்,   இயற்கையோ கடும் பனியை பொழிய செய்து மக்கள் வாழ்க்கையோடு விளையாட துவங்கியுள்ளது.  பல நாடுகளிலும் மக்கள் பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் மக்கள் கடும் பனியினால் பாதிக்கபட்டாலும் மறுபுறம் பனிப்பொழிவை நடுங்கி கொண்டே கொண்டாடவும் செய்கின்றனர். 

அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக அருவியியே 
உறைந்து போகும் அதிசய காட்சி 

சீனாவில் ஹர்பின் நகரில் பனி திருவிழா கொண்டாட்டம்

ஜெர்மனியின் பெர்லின் நகரிலும் பனி திருவிழா கொண்டாட்டம்

இந்தியா: ஹிமாச்சலில் பனியால் உறைந்த பிரஷார் ஏரி 
ஒரு பயணியின் பார்வை   

சிம்லாவில் பனிபொழிவு காட்சி 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 30 December 2017

2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள்

2017ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது, இந்த ஆண்டு நமக்கு தந்து சென்றுள்ள உலகை உலுக்கிய   பத்து   புகைப்படங்கள்   காணொளி காட்சியாக தொகுக்கப்பட்டுள்ளது..ஒவ்வொரு புகைப்படமும் சில மறக்க முடியாத சந்தோஷங்களையும்,       சோகங்களையும்     நமக்குள்     விதைத்து     விட்டு செல்கின்றன...  2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 22 December 2017

ஐந்து நாடுகளின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



சீனா
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் வீடுகளிலும், கடை வீதிகளிலும் வண்ண வண்ண கலைநயமிக்க கிறிஸ்துமஸ் பேப்பர் வேலைப்பாடுகள், ட்ரீ ஆப் லைட் (ஒளி தரும் மரம்) என்ற பெயரில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து அருந்துவது என்று அந்த நாடே கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.   

ஜப்பான் 
எழுபதுகளின் முற்பகுதியில் ஜப்பான் நாட்டில் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டில் கோழிகள் கிடைப்பது அரிதாகி விட்டது, ஜப்பானில் சிக்கன் உணவு வகைகள் கிடைக்கக்கூடிய ஒரே இடம் கேஎப்சி உணவகம்  என்றானது, அது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மாதமானதால் அந்த பழக்கம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கேஎப்சி உணவகங்களில் சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கமாக மாறிவிட்டது. 



இத்தாலி 
இத்தாலி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கி ஜனவரி ஆறாம் தேதி வரை பனிரெண்டு நாட்கள் கொண்டாடபடுகிறது, முக்கியமான நாளாக கருதப்படும் ஜனவரி ஆறாம் தேதி எப்பிஃபனி என்று அழைக்கபடுகிறது, அந்த நாளில் தான் குழந்தை இயேசுவுக்கு மூன்று சாஸ்திரிகள் பரிசுபொருட்கள் கொண்டு வந்து கொடுத்து பார்த்து சென்றதாக நம்பப்படுகிறது. மற்ற நாடுகளை போலவே பண்டிகையின் இறுதி நாளில் நள்ளிரவு ஜெபமும் நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலியா  
உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா தான், இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் துவங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை ஆறு வாரங்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது, கடற்கரையோர நகரங்களுக்கு படையெடுக்கும் அந்நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, அசைவ உணவுகளை பார்பிக்கூ  முறையில் சமைத்து உண்பது என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.   

ஆப்ரிக்கா
350 மில்லியன் கிறிஸ்தவ மக்கள் வாழும் பழம்பெருமை மிக்க ஆப்ரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ சபைகளில் ஆராதனைகளும், வசதி மிகுந்த கிறிஸ்தவர்கள் வசதியற்ற ஏழை மக்களுக்கு உணவு, உடைகள் தந்து அவர்கள் வறுமை போக்கி கிறிஸ்துமஸ் கொண்டாட வைக்கும் நாளாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விளங்குகிறது. 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 15 December 2017

உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்

லகை உலுக்கிய 10 புகைப்படங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 10 புகைப்படங்ளில் சில புகைப்படங்கள் மனித வாழ்வின் கோரமான தருணங்களையும், சில புகைப்படங்கள் மனிதனின் இரக்க குணத்தையும் நமக்கு காண்பிக்கிறது. 

Saturday, 9 December 2017

தலைப்பு செய்தியாகும் இஸ்ரேல் தலைநகரம் - ஜெருசலேம்

இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேம் - அமெரிக்கா அங்கீகாரம்

லக நாடுகள் பல இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க தயங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளார், இந்த முடிவை செயல்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகத்தை  டெல் அவிவ் நகரத்திலிருந்து  ஜெருசலேம் நகரத்துக்கு மாற்ற போவதாகவும் அறிவித்துள்ளார்.  ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் இரண்டுமே தங்களுடையது என்று கருதி வரும் நிலையில், இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். முன்பு, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தியிருந்தது. 



ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின் இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் பதற்றம்
ஸ்ரேல் பாலஸ்தீன எல்லை பகுதியான மேற்கு காசா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.  கடந்த வெள்ளிகிழமை இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் திரளாக ஒன்று கூடி ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் டிரம்ப் உருவப்படத்தை தீயிட்டு எரித்ததை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீது  தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராணுவத்தினர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்  முடிவுக்கு அரபு நாடுகளின் தலைவர்களும், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீக் கூட்டமைப்பின் தலைவர் அகமது அப்துல், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலை ஏற்படும். வன்முறை பெருகும். அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் “அமெரிக்காவின் இந்த முடிவை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அமைதி முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைத்து விட்டது” என்று கூறியுள்ளார். லெபனான், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.



இஸ்ரேல் - பாலஸ்தீனம் - வரலாறு சொல்லும் உண்மைகள்

டந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கும்  அரபு நாடுகளுக்கும் நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதி ஜோர்டான் வசம் இருந்தது. பின்பு, 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் வந்தது, ஒட்டுமொத்த ஜெருசலேம் நகரத்தையும் தங்கள் கடடுப்பாட்டுக்குள்  கொண்டு வந்து விட்டதால் இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனின் தலைநகராக இருக்கும் என்று கூறி வந்தனர். இஸ்ரேலின் அறிவிப்பை ஏற்காத அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு  தூதரகங்களை இஸ்ரேல் நாட்டின்  டெல் அவிவ் நகரிலேயே செயல்பட செய்தன.  கடந்த காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நடந்தது என்ன? உண்மை வரலாறு சொல்லும் காணொளி காட்சி


ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் ஜெருசலேம் நகரம்

ழம்பெருமைமிக்க ஜெருசலேம் நகரம் ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில்....

Saturday, 2 December 2017

சென்ற வார உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை 
மெரிக்கா நாட்டின் எந்த பகுதியையும் குறி வைத்து தாக்க கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை அதிக சக்தி வாய்ந்த  ஹவாசாங்-15 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, 4,475 கிலோமீட்டர் உயரம் வானில் பறந்து 53 நிமிடங்களில் 960 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் விழுந்த இந்த ஏவுகணை இதற்கு முன்பு வட கொரியா பரிசோதித்த எல்லா ஏவுகணைகளை பார்க்கிலும் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹவாசாங்-15 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததின் மூலம் வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை அந்நாடு அடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் வட கொரியா  நடத்திய இந்த ஏவுகணை சோதனை குறித்து "நாங்கள் இதை கவனித்து கொள்வோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  


போர் வந்தால் வட கொரியா முழுவதும் அழியும் - வட கொரியாவுக்கு அமெரிக்கா  எச்சரிக்கை 

ட கொரியா நாட்டின் ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து  ஐ.நா. பாதுகாப்பு குழுவின் அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே, "அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான, வட கொரியாவின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, வட கொரியாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும். அனைத்து நாடுகளும், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உட்பட, வட கொரியாவுடனான அனைத்து வகை வர்த்தக தொடர்புகளையும் நிறுத்த வேண்டும். வட கொரியாவின் மிரட்டல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் பயப்படாது. வட கொரியாவின் இது போன்ற நடவடிக்கைகளால், போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது, அப்படி போர் ஏற்பட்டால், வட கொரியா முழுவதும் அழியும் நிலை உருவாகும். என்று தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியா எரிமலை வெடிப்பு 

ந்தோனேசியா நாட்டின்   பாலி தீவில் உள்ள மவுண்ட் அகுங் எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்ததை அடுத்து அந்நாட்டு அரசு எரிமலைக்கு அருகே தங்கியிருந்த கிராம மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து  வெளியேறி விட்டனர். எரிமலையில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்த சர்வதேச விமான நிலையம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு கடந்த புதன் கிழமை விமானங்கள் பறக்க தகுந்த நிலை வந்த பிறகு மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 


வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப்
ங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள போப் மியான்மர் நாட்டிலிருந்து இராணுவ அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய  ரோஹிங்கியா அகதிகளை சந்தித்தார். முன்னதாக, மியான்மர் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது ரோஹிங்கியா அகதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தவிர்த்து விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் சர்ச்சை எழுப்பி வந்த  நிலையில் வங்கதேசத்தில் போப் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது உலக நாடுகள் ரோஹிங்கியா அகதிகள் படும் துன்பங்கள் குறித்து அக்கறையின்றி இருப்பது குறித்து வருத்தம் தெரிவத்த அவர் அதற்காக உலக நாடுகளை ரோஹிங்கியா மக்கள் மன்னிக்கும்படியும் கேட்டு கொண்டார். 


இந்த மாதம் வெளிவரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பு

டிசம்பர் மாதம் வெளிவர உள்ள புத்தம்புதிய ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பை கீழே உள்ள காணொளி காட்சி தொகுப்பில் காணலாம். 

Saturday, 25 November 2017

சென்ற வார உலகம்

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் கலவரம் ஒடுக்க தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை 

பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒன்று தங்கள் மத கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. அந்த சட்டத்தை மீண்டும் மாற்றி அமைத்து விட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது ஆனால் சட்டத்தை கொண்டு வந்த சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அந்த அமைப்புகள் போராட்டத்தை கை விட மறுத்து தொடர்ந்து போராடி வந்தனர், இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை  போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து பாகிஸ்தான் நாட்டு உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை கலைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. 8500 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு  படையினரும், போலிசாரும் இணைந்து போராட்டக்காரர்களை விரட்டும் பணியில் ஈடுபடுத்தபட்டதில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை க்ண்டுகளும், ரப்பர் குண்டுகளும் வீசப்பட்டது, போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதில் நடவடிக்கையாக பாதுகாப்பு படை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.  இந்த  சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்பி வந்த தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டு உள்ளன. 


எகிப்து: மசூதியில் தீவிரவாதிகள்  தாக்குதலில் 235 பேர் பலி 

நேற்று வெள்ளிகிழமை நவம்பர் 24ஆம் தேதி எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியிலுள்ள அல் ரவ்தா மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 235 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மசூதியின் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் வெளியில் தப்பி ஓடி வரும் மக்களை துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளனர். மசூதியிலிருந்து    வெளியேறும்   மக்கள் தப்பிக்க   முடியாதபடி வெளியில் நின்றிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து உள்ளனர். மனிதத்தன்மையற்ற இந்த கொடூர தாக்குதலை உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ் தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  


ஜிம்பாப்வே: புதிய அதிபராக எம்மர்சன் பதவியேற்றார் 

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது, அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ராபர்ட் முகாபே அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து வெள்ளிகிழமை அன்று புதிய அதிபராக துணை அதிபர் பதவி வகித்து வந்த 75 வயதான எம்மர்சன் நங்கக்வா பதவியேற்றார். கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டை ஆட்சி செய்த முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அந்நாட்டின் பொதுமக்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இப்போது அதிபர் ஆகியிருக்கும் எம்மர்சன் வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போது தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அதிபர் நாற்காலியை தக்க வைத்து கொள்ள முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது. 


காணாமல் போன அர்ஜென்டினா நீர்முழ்கி கப்பல் தேடும் பணி தீவிரம்

தெற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் காணாமல் போன  அர்ஜென்டினா நாட்டு ராணுவ நீர்முழ்கி கப்பல், கடைசியாக ராடார் சிக்னல் கிடைத்த  இடத்துக்கு அருகிலிருந்து பலத்த சத்தம் கேட்டதால் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதையடுத்து காணாமல் போன நீர்முழ்கி கப்பலை தேடும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. கப்பலில் பயணித்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பு குறைபாடு கொண்ட கப்பலில் தங்கள் உறவுகளை பயணம் செய்ய வைத்து விட்டதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். 


அமெரிக்கா: அமெரிக்க அதிபரின் டைம் கேம்

கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை 2௦16 ஆம் வருடத்தின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்து அறிவித்தது.  இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை சிறந்த மனிதராக தன்னை அறிவிக்க விரும்பி தன்னை தொடர்பு கொண்டதாகவும்  ஆனால் தான் அதை மறுத்து விட்டதாகவும் ட்ரம்ப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார், ஆனால் டைம் பத்திரிக்கை இந்த செய்தியை மறுத்துள்ளது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 17 November 2017

சென்ற வார உலகம்

ஜிம்பாப்வே - இராணுவ ஆட்சி  
ஜிம்பாப்வேயில் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில், 1980ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் 93 வயதாகும் அந்நாட்டு அதிபரான ராபர்ட் முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள  அவர், வீட்டுக்குள் இருந்தபடியே ராணுவ உயர்அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,  இப்போது வரை ராபர்ட் முகாபே பதவி விலக மறுத்து வருகிறார். ராபர்ட் முகாபேக்கு பிறகு யார் ஆட்சிக்கு வருவது என்று துவங்கிய அதிகார போட்டியில் தனக்கு பின் தன் மனைவியை அதிபராக்க ராபர்ட் முகாபே முயற்சித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை அதிபரான எம்மர்சன் மனங்காக்வாவை பதவி நீக்கம் செய்ததை அடுத்து ராணுவம் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளது. நாட்டை கைப்பற்றியுள்ள ராணுவமோ நாங்கள் அதிபரை வீட்டு சிறையில் வைக்கவில்லை என்று மறுத்து வருகிறது. 



ஏமன்: பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் மடியும் அபாயம் 
ஏமன் நாட்டுக்கு உதவி பொருட்கள் (உணவு, மருந்து, தண்ணீர்) கொண்டு செல்லும் தரை, வான் மற்றும் கடல் வழித்தடங்கள் எல்லாவற்றையும் சவுதி அரசு அடைத்துள்ள நிலையில் அந்நாட்டில் இந்த சூழ்நிலை காரணமாக வரபோகும் கடும் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடு கிளர்ச்சியாளர்களுக்கு போர்கருவிகளை ஏமன் நாட்டின் எல்லைபகுதி வழியாக கடத்தி வருவதால் அந்த வழித்தடங்களை அடைத்து விட்டதாக சவுதி அரசு கூறி வருகிறது, ஐ நா சபையின் எச்சரிக்கைக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சவுதி அரசை ஏமன் நாட்டுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்கும்படி நிர்பந்தித்து வருகின்றன.   


ஈராக்: முடிவுக்கு வரும் ஐஸ்ஐஸ் ஆதிக்கம்
கடந்த வெள்ளி அன்று, ஈராக் படையினர் ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த கடைசி நகரமான ராவாஹ்வையும் விடுவித்ததை அடுத்து ஈராக் நாட்டில் ஐஸ்ஐஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது, ராவா ஹ் நகரத்தில் அமெரிக்க விமான படையோடு இணைந்து ஈராக் படையினர் தொடர்ந்து நடத்திய ஐந்து மணி நேர தாக்குதல்களில் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே சிரியாவில் ஐஸ்ஐஸ் ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஈராக் முழுமையாக ஐஸ்ஐஸ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.  


ஈரான் நிலநடுக்கம் 
கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஈரான்-இராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் (ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆகப் பதிவாகி உள்ளது) நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள் இரவில் நடுங்கும் குளிரில் வெட்டவெளிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. பெரும் எண்ணிகையில் காயமடைந்த மக்கள் மருத்துமனைகளில் குவிந்து வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துமனைகள் திணறி வருகின்றன.

பில்லியன் கேப்ச்சர் பிளஸ் 
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. கடந்த வாரம் பில்லியன் கேப்ச்சர் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டு உள்ளது. 5.5 இன்ச் தொடுதிரையுடன், 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் கொண்டுள்ளது.  ஆக்டோகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625  பிராசசர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்  3 ஜிபி RAM + 32 ஜிபி ROM கொண்ட மாடல்  ரூ. 10,999க்கும்  4GB RAM + 64GB ROM கொண்ட மாடல் ரூ. 12,999 க்கும் கிடைக்கிறது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 11 November 2017

சென்ற வார உலகம்

அமெரிக்கா: சர்ச்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலி

கடந்த ஞாயிறு அன்று, அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லாண்ட் ஸ்ப்ரிங்ஸ் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 20 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்க் போம்ரே என்ற பாப்திஸ்து சபை போதகர் அவர்களின் மகளும் இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி இறந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய 26 வயதான டெவின் பேட்ரிக் கெல்லியை காரில் போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் கெல்லி இறந்து விட்டான், இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிக கொடூரமான தாக்குதல் என்று வேதனையுடன் வருத்தம் தெரிவித்துள்ளார். 


சவுதி அரேபியா - லெபனான் போர் மூளும் அபாயம்

சவுதி அரேபியா நாட்டிற்கும் லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் இப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான யுத்தமாக உருமாற துவங்கி உள்ளது. சவுதி அரேபியா நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கமே காரணம் என்று சவுதி அரசு கருதுகிறது.  ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கு சவுதி அரேபியா அரசு அமெரிக்காவோடும், மேற்கத்திய நாடுகளோடும் காட்டி வரும் நெருக்கம் பெரும் வருத்தத்தை அளித்து வந்தது. சவுதி அரசாங்கமே, தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க தவறியதாக கூறி லெபனான் நாட்டின் பிரதமரை பதவி விலக செய்தது என்றும், பின்பு லெபனான் பிரதமரை செயல்பட விடாமல் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கம் சவுதி அரேபியா அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சவுதி அரசாங்கம், ஏமன் பகுதியிலிருந்து தங்கள் நாட்டின் மேல் கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தி தங்கள் நாட்டின் மீது லெபனான் போர் தொடுத்துள்ளது என்று கூறி,  லெபனான் நாட்டிலுள்ள தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை லெபனான் நாட்டில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளன.  இந்த நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 



வியட்நாம்: மழை - வெள்ளத்தில் சிக்கி 106  பேர் பலி

வியட்நாம் நாட்டில் பல சர்வதேச நாடுகளின் அதிபர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் அந்த நாட்டை டாம்ரே புயல் உலுக்கியெடுத்து வருகிறது, பெரும் புயலோடு 1700 மிமீ மழை பெய்ததில் 49 அணைகள் அபாய அளவை தாண்டி விட்டதால் அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 197  பேர் புயலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன:



இந்தியா: டில்லியில் விஸ்வரூபமெடுக்கும் காற்று மாசு வீட்டுக்குள் முடங்கும் மக்கள்

நம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று 144 தடை உத்தரவை அரசாங்கம் பிறப்பிப்பது வழக்கம், ஆனால் கடும் பனிப்பொழிவோடு காற்றில் மாசும் அளவுக்கதிகமாக அதிகரித்து கொண்டே போனதால், அந்த மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டில்லி அரசாங்கம் அதிகாலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் போதுமான வெளிச்சமின்மையால் வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருந்து வரும் கரும்புகையோடு பஞ்சாப் மாநிலத்தின் வயல்வெளிகளில் எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளியேறும் பெரும் புகையும்  இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண டில்லியில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட ஆட் ஈவன் வாகன பதிவு எண் இயக்க முறையை மீண்டும் பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது. 



சியோமி ரெட்மி Y 1

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் கடந்த வாரத்தில் புதிய தயாரிப்பான ரெட்மி Y 1 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ரெட்மி Y 1  5.5 " தொடுதிரையை கொண்டுள்ளது.   435 சிப்செட் கொண்ட ஸ்நாப்டிராகன் மூலம் இயங்கும் இந்த  ஸ்மார்ட் போன்  3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளக நினைவகமும் கொண்டுள்ளது,  இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP  செல்பி கேமராவும், பின்புறத்தில் 13MP   கேமரா வசதியும் கொண்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் / ஐஆர் பிளாஸ்டர் வசதிகளும் உள்ளது. 


--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்