Friday 17 November 2017

சென்ற வார உலகம்

ஜிம்பாப்வே - இராணுவ ஆட்சி  
ஜிம்பாப்வேயில் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில், 1980ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் 93 வயதாகும் அந்நாட்டு அதிபரான ராபர்ட் முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள  அவர், வீட்டுக்குள் இருந்தபடியே ராணுவ உயர்அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,  இப்போது வரை ராபர்ட் முகாபே பதவி விலக மறுத்து வருகிறார். ராபர்ட் முகாபேக்கு பிறகு யார் ஆட்சிக்கு வருவது என்று துவங்கிய அதிகார போட்டியில் தனக்கு பின் தன் மனைவியை அதிபராக்க ராபர்ட் முகாபே முயற்சித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை அதிபரான எம்மர்சன் மனங்காக்வாவை பதவி நீக்கம் செய்ததை அடுத்து ராணுவம் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளது. நாட்டை கைப்பற்றியுள்ள ராணுவமோ நாங்கள் அதிபரை வீட்டு சிறையில் வைக்கவில்லை என்று மறுத்து வருகிறது. 



ஏமன்: பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் மடியும் அபாயம் 
ஏமன் நாட்டுக்கு உதவி பொருட்கள் (உணவு, மருந்து, தண்ணீர்) கொண்டு செல்லும் தரை, வான் மற்றும் கடல் வழித்தடங்கள் எல்லாவற்றையும் சவுதி அரசு அடைத்துள்ள நிலையில் அந்நாட்டில் இந்த சூழ்நிலை காரணமாக வரபோகும் கடும் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடு கிளர்ச்சியாளர்களுக்கு போர்கருவிகளை ஏமன் நாட்டின் எல்லைபகுதி வழியாக கடத்தி வருவதால் அந்த வழித்தடங்களை அடைத்து விட்டதாக சவுதி அரசு கூறி வருகிறது, ஐ நா சபையின் எச்சரிக்கைக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சவுதி அரசை ஏமன் நாட்டுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்கும்படி நிர்பந்தித்து வருகின்றன.   


ஈராக்: முடிவுக்கு வரும் ஐஸ்ஐஸ் ஆதிக்கம்
கடந்த வெள்ளி அன்று, ஈராக் படையினர் ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த கடைசி நகரமான ராவாஹ்வையும் விடுவித்ததை அடுத்து ஈராக் நாட்டில் ஐஸ்ஐஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது, ராவா ஹ் நகரத்தில் அமெரிக்க விமான படையோடு இணைந்து ஈராக் படையினர் தொடர்ந்து நடத்திய ஐந்து மணி நேர தாக்குதல்களில் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே சிரியாவில் ஐஸ்ஐஸ் ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஈராக் முழுமையாக ஐஸ்ஐஸ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.  


ஈரான் நிலநடுக்கம் 
கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஈரான்-இராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் (ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆகப் பதிவாகி உள்ளது) நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள் இரவில் நடுங்கும் குளிரில் வெட்டவெளிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. பெரும் எண்ணிகையில் காயமடைந்த மக்கள் மருத்துமனைகளில் குவிந்து வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துமனைகள் திணறி வருகின்றன.

பில்லியன் கேப்ச்சர் பிளஸ் 
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. கடந்த வாரம் பில்லியன் கேப்ச்சர் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டு உள்ளது. 5.5 இன்ச் தொடுதிரையுடன், 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் கொண்டுள்ளது.  ஆக்டோகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625  பிராசசர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்  3 ஜிபி RAM + 32 ஜிபி ROM கொண்ட மாடல்  ரூ. 10,999க்கும்  4GB RAM + 64GB ROM கொண்ட மாடல் ரூ. 12,999 க்கும் கிடைக்கிறது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்