அமெரிக்காவை அதிர வைத்த கொடூர துப்பாக்கி சூடு தாக்குதல்:
அமெரிக்காவில் சூதாட்டம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பேர் பெற்ற
நகரமாய் திகழும் லாஸ் வேகாசில் ஒரு இசை திருவிழாவின் போது நடந்த
துப்பாக்கி சூட்டில் குறைந்தது 59 பேர் இறந்துள்ளனர் ஐநூறுக்கும்
மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர், 64 வயதான ஸ்டீபன் படாக் என்பவன்
இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு ஓட்டலின் 32வது
மாடியிலிருந்து துப்பாகியால் மக்கள் கூட்டத்தை குறி வைத்து இந்த
தாக்குதலை நடத்தி விட்டு தன்னையும் சுட்டு கொண்டு இறந்துள்ளான். என்ன
நோக்கத்திற்காக இந்த கொடிய செயலில் அவன் ஈடுபட்டான் என்பது
தெரியவில்லை, இந்த தாக்குதல் இசை நிகழ்ச்சி நடந்த போது
நிகழ்த்தபட்டதால் மக்கள் துப்பாக்கியால் சுடும் சத்தத்தை இசை நிகழ்ச்சியில்
வரும் சத்தம் அன்று துவக்கத்தில் நினைத்துள்ளனர் ஆனால் ஐந்து
நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கவே அதிர்ச்சியடைந்து
கலைந்து ஓடியுள்ளனர்.
பெருகி வரும் துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க தேசத்தின் வரலாற்றில்
இப்படிப்பட்ட துப்பாக்கி சூடு - வன்முறை சம்பவங்கள் நடப்பது இது முதல்
முறையல்ல, கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் அமெரிக்க
தேசத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது, அப்படிப்பட்ட சம்பவங்களின்
தொகுப்பை கீழே உள்ள கானொளியில்:
இப்படிபட்ட சம்பவங்கள் நிகழும் இடத்தில சிக்கிகொண்டால் உங்களை தற்காத்து கொள்வது எப்படி என்று விளக்கும் காணொளி காட்சி: